தரிசனத்தின் முதல் பகுதி, நான் என்ன செய்கிறேன்? என்ற வெளிப்பாடு முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம், என்று கர்த்தர் சொன்னார் இந்த தலைமுறை முள்ளில் உதைத்து கொண்டிருக்கிற தலைமுறை. இன்றைய தலைமுறை தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாது இருக்கிறார்கள். அதை சமூக ஊடகத் தலைமுறை என்று கூட அழைக்கலாம். லைக்குகள், வியூக்கள், ரீல்கள் மற்றும் ஷாட்ஸ்கள், இன்ஸ்டாகிராம் இவற்றைப் பிடித்துக்கொண்டு போகிற ஒரு தலைமுறை. Screen Addiction எனப்படுகிற ஊடகத் திரைக்கு அடிமைப்பட்ட ஒரு தலைமுறை. ஊடகத்திலே நல்ல காரியங்களும் இருக்கின்றன; ஆனால், கெட்ட காரியங்கள் தான் அதிகம். தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் பண்ணப்படுகிற கோமாளித்தனங்கள், ஆபத்தான விஷயங்கள், சர்ச்சையைக் கிளப்புகிற விஷயங்கள் இவற்றில் இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது.
October 2026
SEP 2025
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நமக்கு முன்பாகப் புறப்பட்டு, 'முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலினால் நம்மை எழுப்புகிறவரும்" (2 சாமு. 5:24), 'நீ எங்கே இருக்கிறாய்?" (ஆதி. 3:9) என்றும், 'இங்கே உனக்கு என்ன காரியம்?" என்றும் (1 இராஜா. 19:9), 'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றும் நமது இருப்பிடங்களை உணரச் செய்கிறவரும், நமது நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரும் (சங். 17:5), நமது ஆத்துமாவை மரணத்துக்கும், நமது கால்களை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவருமாகிய (சங். 56:13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 'சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற" அவருக்குள் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகப் பாதுகாத்துவருகின்ற தேவனுக்கே (கொலோ. 2:10) எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக!
பிரியமானவர்களே! கிருபையினாலே ஆயுசுநாட்களை அவர் நமக்குக் கூட்டிக்கொடுத்தாலும், காரணங்களுடனேயே அவைகள் நமக்கு நீட்டித்தரப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின்போதும், நம்முடைய வாழ்க்கைக்காக நாம் என்ன என்ன காரியங்களைச் செய்யவேண்டும்? என்ற எண்ணங்களால் மாத்திரமே நம்முடைய சிந்தையை முழுவதும் நிறைத்துவிட முற்படாமல், 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33) என்ற வார்த்தைக்கு இணங்கி வாழ்க்கையைத் தொடங்குவோமென்றால், அந்த நாளின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்பது திண்ணம். இத்தகைய காரணங்களைப் புரிந்துகொண்டவர்களாக, தேவனுடைய இராஜ்யத்திற்கடுத்தவைகளால் நமது சிந்தைகளை நிரப்பி, நம்முடைய தேவைகளும் சந்திக்கப்பட தேவன் உதவிசெய்வாராக!
தேவ இராஜ்யத்தின் தேவை அதிகரித்துவரும் இந்நாட்களில், நமக்கு நியமிக்கப்பட்டவைகளை நிறைவேற்ற பொறுமையோடு நாம் ஓடிக்கொண்டிருந்தாலும், தேவ இராஜ்யத்தின் சேவைக்காக எழும்பும் இளந்தலைமுறையினை உருவாக்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தபோது, 'நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்று ஏசாயாவின் மூலமாக கர்த்தர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்; பதிலாகப் பதினைந்து வருடங்களையும் கூடப் பெற்றுக்கொண்டான் (2 இராஜா. 20:1-3,6). ஆனால், அவன் செய்துவிட்ட தவறினிமித்தம், 'இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 இராஜா. 20:17,18) என்று சொல்லப்பட்டபோதோ, அச்செய்தி அவனை உடைக்கவில்லையே! அவனுடைய கண்களில் அது கண்ணீரை உண்டாக்கவில்லையே!! மாறாக, 'நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான"; என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே" (2இராஜா. 20:19) என்று எசேக்கியா கூறும் வார்த்தைகள், எத்தனை பரிதாபகரமானவை!
இன்றைய நாட்களிலும், தன்னுடைய வாழ்க்கையை மாத்திரமே கருத்தில் கொண்டு, வருங்காலத்தினரைக் குறித்து கனவிலும் கரிசனையின்றி வாழும் மனிதர்கள் அநேகர். 'உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்" (லூக். 2:29) என்ற சந்தோஷமானதோர் முடிவினை, நம்முடைய உதடுகளினால் உச்சரிக்கும் பாக்கியத்தினை கர்த்தர் நமக்குத் தந்திருந்தாலும், வருங்காலத்தினருக்கு வருத்தங்களை வைத்துவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதிலும், வருங்காலத்தினரை தங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக வடிவமைத்து விட்டுச் செல்லும் சிற்பிகளாக நாம் காணப்படவேண்டும் என்பதிலும் நம்முடைய பங்கு அதிகமல்லவா!
இன்றைய நாட்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில், இளம் தலைமுறையினரை உருவாக்கும் பொறுப்பு இரண்டு இடங்களில் விடப்பட்டிருக்கின்றது; ஒன்று வீடு; மற்றொன்று சபை. இவ்விரண்டும் பிரதானமானவைகள். இடையிடையே வந்துசெல்லும் கூட்டங்கள், முகாம்கள் போன்றவைகளில் இளைய தலைமுறையினர் சற்று தங்கி தாபரித்தாலும், தாகம் தீர்த்துக்கொண்டாலும், தங்கள் வாழ்க்கைக்கேற்ற காரியங்களைக் கற்றுக்கொண்டாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலேற்றிக்கொண்டாலும், தொடர்ந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யவிருக்கும் வாகனங்கள் வீடும் சபையுமே என்பதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எத்தனை தூரத்தில் அவர்கள் வாழ்ந்தாலும், இவ்விரு முனைகளோடு கூடிய தொடர்பு, அவர்களது வாழ்க்கையில் துரு ஏறாமல் பாதுகாத்துக்கொள்ள பெலம்பொருந்தியது. என்றபோதிலும், இவ்விரு துருவத்தினைத் தொடாமலும் மற்றும் தொடப்படாமலும், 'தன் இக்ஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" (நீதி. 29:15) என்பதே சாலொமோனின் வார்த்தைகள். இன்றைய நாட்களில், வீட்டிற்கும் சபைக்கும் வெட்கத்தைக் கொண்டும் வரும் தலைமுறையினர், வீட்டாலும், சபையாலும் 'தன் இக்ஷ்டத்துக்கு விடப்பட்டவர்களே!"
'ஏலியின் குமாரர் (ஆசாரியர்கள்) பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை" (1 சாமு. 1:12); இவர்கள் ஆசாரியனுடைய குமாரர்கள் என்பது ஆச்சரியம்! ஆலயத்தில் அவர்கள் பணிவிடையும் செய்துகொண்டிருந்தார்கள் என்பது அடுத்த ஆச்சரியம்!! இப்படிப்பட்ட இடத்தில் விடப்பட்டதாலேயே 'சாமுவேலும் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான்" (1 சாமு. 3:7); தேவனுடைய ஆலயத்தை நம்பி விடப்பட்ட பிள்ளையிடம், ஆசாரியனாகிய ஏலிகூட கர்த்தரைப் பற்றி கற்றுக்கொடுக்கவில்லையோ! ஏலியின் குமாரர்கள் ஆலயத்தில் செய்யும் அட்டகாசங்களைத்தான் ஒருவேளை அவன் பார்த்துக்கொண்டிருந்திருப்பானோ! ஆலயத்திலிருந்த ஆசாரியர்கள் அவமாய்ப் போனதினால்தான், தேவனே சாமுவேலோடு நேரடியாகப் பேசும் நிலை உண்டாயிற்றோ! பிரியமானவர்களே! நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக அவர் மாற்றியிருக்க (வெளி. 1:6), சாமுவேல் போன்ற இளந்தலைமுறையினருக்கு முன்பாக மாதியாக வாழ்ந்து, ஆண்டவரைக் காண்பிக்கும் பொறுப்பு நமக்கு அதிகம் உண்டல்லவா!
கர்த்தருக்கென்று ஜனங்கள் கொண்டுவரும் பலியை தங்கள் கரங்களிலிருக்கும் ஆயுதங்களால் குத்தி பலவந்தமாய் எடுத்துக்கொள்வதையும் (1 சாமு. 2:13,14), ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே ஆசாரியர்களான ஏலியின் குமாரர் சயனிப்பதையும் (1 சாமு. 2:22) வருஷந்தோறும் சீலோவிற்கு கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படியாக வந்துசென்ற எல்க்கானாவும் அன்னாளும் அறியாமலிருந்திருப்பார்களோ! என்றபோதிலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களைப் பார்த்து அல்ல, ஆண்டவரை மாத்திரமே பார்த்தவர்களாக, குழந்தையாயிருந்த தங்களுடைய பிள்ளையை அவர்கள் ஆலயத்தில் கொண்டுவந்து விட்டது, தேவனுடைய ஆலயத்தின் மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் உச்சத்தை எத்தனையாய் வெளிப்படுத்துகின்றது. ஆசாரியர்கள் எப்படிப்பட்டவர்களாகக் காணப்பட்டபோதிலும், 'சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்" (1 சாமு. 2:21) என்றுதானே வேதம் வர்ணிக்கின்றது. ஒருபுறம், தேவாலயத்தினைக் குறித்த ஜனங்களின் நம்பிக்கை இத்தகையதாயிருக்க, மறுபுறமோ, ஆசாரியர்களான ஏலியும் குமாரர்களும் தேவாலயத்திற்கு வந்துசெல்லும் ஜனங்கள் மீது பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவது எத்தனை வேதனையானது? 'நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்" (1 சாமு. 2:29) என்ற தேவனது வார்த்தைகள், தேவனை மாத்திரமல்ல, ஆலயத்திற்கு வந்துசெல்லும் மற்றவர்களைக் குறித்தும் ஏலி கரிசனையற்றிருந்ததற்கான காரணத்தைத் தெரியப்படுத்துகின்றதே! போரில் வீழ்ந்ததும், பிடரி முறிந்ததும்தானே அவர்களது முடிவாயிருந்தது. இவைகள் நம்மை எச்சரிக்கத்தானே எழுதப்பட்டிருக்கின்றன.
இன்றைய நாட்களில், தன்னிடத்தில் வந்துசெல்லும் ஜனங்களின் உதவிகளையும் மற்றும் ஒத்தாசைகளையும் பெற்றுக்கொள்ள மாத்திரமல்ல, அவர்களுக்கு தான் செய்யவேண்டிய பொறுப்பினையும் கூடவே சபை உணர்ந்துகொள்ளுமென்றால், சபையின் சரித்திரம் வெற்றியாகத் தொடரும். சாமுவேலைப் போன்ற எத்தனையோ இளைஞர்களை, சபையினை நம்பி தேவன் கொடுத்திருக்கின்றாரே! தேவ சந்நிதிக்கு வந்து செல்லும் இவர்களைக் குறித்து பொறுப்பற்றதாகச் சபை காணப்படுமென்றால், தேவனை அவர்களுக்குக் காண்பிக்கத் தவறுமென்றால், பொறுப்பற்றோரை அகற்றி, சாமுவேலைப் போன்ற இளைஞர்களை தேவனே தெரிந்துகொண்டு பொறுப்பிலேற்றும் நாட்கள் தூரத்திலில்லை.
பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவோரின் நிலையும் மற்றும் எதிர்காலமும் இப்படியிருக்குமென்றால், எழுந்துவரும் புதிய தலைமுறையினரின் மீது பொறுப்பினை உணர்ந்து செயல்படத் துடிக்கும் சபை எப்படிச் செயல்படவேண்டும்?
1. அசைக்க இயலாத அடித்தளம் : எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாச்சாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன் என்றும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது (1 கொரி. 3:10,11) என்றும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எழுதுகின்றார் பவுல், அவ்வாறே, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி. 22:6) என்று தேவன் தனக்கு அருளிய ஞானத்தில் எழுதுகின்றார் சாலொமோன். இவ்வசனங்கள் கற்றுத்தரும் சத்தியம் என்ன? அசைக்க இயலாததோர் ஆழமான அஸ்திபாரம் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டுவிடவேண்டும் என்பதுதானே. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கைக்கு இவ்வசனங்கள் எத்தனை முக்கியத்துவமானவைகள்.
கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவருடையவர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரை, எத்தனை உயரமான மற்றும் அலங்காரமான மேடைகளில் ஏற்றுகின்றோம் என்பதல்ல; மாறாக, எத்தனை ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றோம், அவைகளில் அவர்களை வழிநடத்துகின்றோம் மற்றும் நிலைத்திருக்கச் செய்கின்றோம் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அசையாததோர் அஸ்திபாரத்தை நாம் அமைத்துக்கொடுக்கமுடியும். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத். 7:25) என்று நாம் உருவாக்குபவர்களைக் குறித்து சொல்லப்படட்டும்.
2. வருங்காலத் தலைமுறைக்கு வாழுவோரே வழிகாட்டிகள் : சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே (கலா. 4:12) என்றும், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1கொரி 11:1) என்றும், தன்னையே மாதிரியாக முன்வைத்து வாழுந்தலைமுறைக்கு வழிகாட்டுகின்றார் பவுல். ஆம், போதிப்பதாலும், கூட்டங்களையும் மற்றும் முகாம்களையும் நடத்துவதாலும் மாத்திரமல்ல, கூடவே, நம்மையே இத்தலைமுறைக்கு மாதிரியாக முன்னிறுத்தும் பொறுப்பும் நமக்கு உண்டல்லவா. நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி (தீத். 2:7) என்பதும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1 தீமோ. 4:12) என்பதும்தானே உடன் ஊழியருக்கும் பவுல் கூறும் அறிவுரை. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16) என்று கிறிஸ்துவும் போதித்தாரே.
மேலும், 'இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்" என்று போதித்ததைத் தொடர்ந்து, 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத். 18:5,6) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை, எழுந்துவரும் இன்றைய இளையதலைமுறையினருக்கு முன், இடறலற்றவர்களாகவும் மற்றும் மாதிரிகளாகவும் நாம் வாழவேண்டியதின் முக்கியத்தை எத்தனையாக எடுத்துக்கூறுகின்றது. இத்தகைய தரத்திலிருந்து தவறிவிடாமல், தலைமுறையினரைத் தன் பக்கமாகத் தக்கவைத்து, தற்காக்கும் பொறுப்பு சபைக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாதே!
3. அழைப்பையும் மற்றும் ஆவியின் வரங்களையும் பற்றிய அறிவு : இன்றைய நாட்களில், இரட்சிக்கப்பட்டபோதிலும், அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும், ஊழியர்கள் தங்கள் கரங்களை வைத்ததினால் வாழ்க்கையில் வரங்களைப் பெற்றுக்கொண்டபோதிலும், தங்களது அழைப்பையும் மற்றும் ஆவிக்குரிய வரங்களையும் பற்றிய தெளிவான அறிவு இல்லாததினால், எழுந்துவரும் இளந்தலைமுறையினர் அநேகரது வாழ்க்கையின் விளக்கு வெளிச்சம் தரவேண்டிய அளவிற்கு வெளிச்சம் தரவில்லை. நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன் (2 தீமோ. 1:6) என்று தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டி எழுதுகின்றார் பவுல். இத்தகைய நினைப்பூட்டுதலை, இளந்தலைமுறையினருக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது என்ன? என்பதை அறிந்துகொள்ளும் பொறுப்பும் சபைக்கு உண்டல்லவா! வாலவயதினரின் சரீர பெலனை மாத்திரம் பயன்படுத்திக்கொள்வதாகச் சபை காணப்படாமல், அவர்களிடம் உள்ள உன்னதத்திற்கடுத்தவைகளையும் உணர்ந்து சபை பயன்படுத்தத் தொடங்குமென்றால், அவர்களால் சபையின் பெலன் பெருகுவது நிச்சயம். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:4,5). யோசேப்பைப் போன்ற, தானியேலைப் போன்ற, நெகேமியாவைப் போன்ற தேவ ஆவியைப் பெற்ற இளைஞர்கள் அந்நிய தேசத்திலும் அணைந்துபோகாமல் தேவனுக்காக நிற்கக்கூடியவர்களல்லவா!
4. உதவியாளர்களாக மாத்திரமல்ல உடன் ஊழியர்களாக : இறுதியாக, இன்றைய நாட்களில் சபைக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்று, புதிதாக எழும்பிவரும் கிறிஸ்துவை அறிந்த இளம் தலைமுறையினரை சுவிசேஷகர்களாகவும், நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், சபை மேய்ப்பர்களாகவும் மற்றும் பிற ஊழியங்களைச் செய்பவர்களாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளையும் வரங்களையும் அறிந்தவர்களாக அவர்களை உருவாக்குவது. இத்தொடர்பணியில் சபை தவறுமென்றால், தொடர் பயணமே தடைபட்டுவிடக்கூடும்.
மோசேயின் கரங்களில் யோசுவா என்னும் இளைஞன் கொடுக்கப்பட்டிருந்தான். மோசேக்கு உதவியாயிருந்தது மாத்திரமல்ல, கர்த்தர் செய்யும் அநேக அற்புதங்களையும் கண்கூடாகக் காணும் சிலாக்கியமும் யோசுவாவுக்குக் கிடைத்திருந்தது. மோசே மலை உச்சியிலே கோலைப் பிடித்துக்கொண்டு நின்றபோது அமலேக்கோடே யுத்தம் செய்தவன் யோசுவா (யாத்.17:9,10);, நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுக்கும்படியாக மோசேயை தேவன் அழைத்தபோது, மோசேயோடுகூட தேவ பர்வதத்தில் ஏறிப்போனவன் யோசுவா (யாத். 24:12,13), ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தவன் யோசுவா (யாத். 33:11), கானானை சுற்றிப் பார்த்த மனிதர்கள் துர்ச் செய்தியைப் பரம்பச் செய்தபோது தனது வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டவன் யோசுவா (எண். 14:6); இப்படிப்பட்ட யோசுவாவை, மோசேயின் ஓட்டத்தினைத் தொடரும்படியாக தேவன் தெரிந்துகொண்டாரே! இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட தொடரோட்டத்திற்கு ஆயத்தமாயிருக்கும் இளைஞர்களை ஊழியர்களாக தேவன் உயர்த்தக்கூடுமல்லவா! அத்தகைய வாலிபர்களை அடையாளம் கண்டுகொண்டு, தேவ இராஜ்யத்தின் பணிக்காக அவர்களை பயிற்றுவிப்பது எத்தனை அவசியமானது. இக்கடைசி நாட்களில், சபை இதனைப் புரிந்துகொள்ளுமென்றால், வாலிபர்கள் பலரை கிறிஸ்துவின் வீரர்களாக்கிவிடுமே! தேவ ஜனத்தை தொடர்ந்து வழிநடத்துபவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுமே! இயேசு கிறிஸ்து சீஷர்களிடத்தில் பணியினை ஒப்புவித்ததுபோல, பவுல் தீமோத்தேயு போன்ற உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஊழியத்தை ஒப்புவித்ததைப் போல ஊழியர்கள் பலர் உருவாகவும் காரணமாகிவிடுமே! இத்தகைய பொறுப்பினை உணர்ந்து சபை செயல்படுமென்றால், 'தலைவர்களற்ற நிலையும், மேய்ப்பர்களற்ற நிலையும்" தேவ ஜனத்திற்கு உருவாகாது என்பது நிச்சயம். இதனைப் உணர்ந்துகொண்டவர்களாக வரும் நாட்களில் செயல்பட கர்த்தர் உதவிசெய்வாராக!
முசுக்கொட்டை இரைச்சல் கேட்டு விட்டால்
முன்னே அவர் புறப்பட்டு விட்டார்
'என்ன காரியம் இங்கே' எனக் கேட்பதற்குள்
எழுந்து செல்வது நம் கடமை அல்லவா
இக்கால இளைஞர்களை இக்ஷ்டத்துக்கு விட்டுவிட அல்ல
இராஜ்யத்தின் இராணுவத்தில் இணைப்பதுதானே நம் கடமை
அலங்கார மேடைகள் மாம்சத்துக்கு மகிழ்ச்சி தரலாம் - ஆனால்
ஆழமான சத்தியங்களே அவர்கள் ஆத்துமாவுக்கு அஸ்திபாரம்
வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாதிரிகள் நாம்
வருங்காலத் தலைமுறையை வடிவமைக்கும் சிற்பிகள் நாம்
உடனிருக்கும் தலைமுறையை ஊழியராய் உருவாக்கிடுவோம்
உன்னதத்தின் தலைமுறையாய் உலகத்தில் பரம்பச்செய்வோம்
அன்பரின் அறுவடைப் பணியில்
சகோ. P.J. கிருபாகரன்
August
லும், மீண்டும் அவைகளை எழுதிக்கொடுத்தார் (யாத். 34:1; உபா. 9:10). அவைகள் தேவ ஜனங்கள் வாழும் வகையைக் கண்டுகொள்வதற்கு உதவியாகத்தரப்பட்டது.


'ஐசுவரியமும் கனமும் என்னால் வருகிறது என்று நீ அறிந்தபோதிலும், இறுமாப்படைந்து, நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்து, சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்த் தருகிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தினால் எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ளுவேன் என்று கூறி, பிரசங்கத்தை எல்லாம் அதைச் சுற்றியே தயாரித்து ஜனங்களுக்குத் தந்தாய். நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நண்பரைச் சேர்த்து, நன்மை செய்து, நற்கிரியைகளையும் இணைத்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தவறி, உன்னை ஐசுவரியவானாகக் காண்பிக்க, கடனையாகிலும் வாங்கியோ, மாதத்தவணையிலாவது பொருள்களை வாங்கிக் குவித்தோ, அவைகளால் ஆளப்பட்டு, சிக்குண்டு கிடக்கிறாய். அதுவும், உன் கண்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதால், உன்னை நான் தொடும்படிக்கும், நீ விடுதலையாகிவிடும்படிக்கும் என்னிடத்தில் ஓடிவந்துவிடு.
அவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும் என்பதுதானே என் ஊழியக்காரன் கொடுத்த ஆலோசனை. அரிபிளவுபோல அது பரவுமே. அதிசீக்கிரமாக முளைக்கும் களைகளுக்கு நீரை வார்த்ததுபோல, நேரம், பணம், ஈர்ப்பு அனைத்தையும் அந்த கொள்கையைப் பரப்புவதற்கே என்று காண்பித்து, அநேகரை நீதி பாதையினின்று திசைதிருப்புவதில் வெற்றியும் கண்டு, முடிவில் அழிவைச் சந்திக்க நீ பயப்படாமற்போனதென்ன? உருவின பட்டயத்தை உடையவர் நான் என்று அறியமாட்டாயோ! வைராக்கியம் பாராட்டும் நீ, என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து அல்லவோ மேன்மை பாராட்டியிருக்கவேண்டும்; மாறாக, வெறிகொண்டவனைப்போல நடந்துகொள்கிறாயே! என் பட்டயம் யுத்தம் செய்யவேண்டுமோ!
சாதக முறை (Positive approach) பிரசங்கங்கள், வேதத்திலிருந்துதான்; ஆனால், வேதம் சொல்லும் 'கருப்பொருளைப்" புரிந்துகொள்ளாதபடி கண்சொருகிப்போனதினால், தன் தவற்றைப் புரிந்துகொள்ளக்கூடாதது.

உன்னை என்னிடத்தில் வழிநடத்தத் தவறிவிட்ட அவனும், அவனைப் பின்பற்றும் நீயும் ஒருமிக்க விழுவீர்களே! நாசியில் சுவாசமுள்ள மனிதன் உன்னை கறளைச்செடியாய் மாற்றிவிடுவேன்; கொண்டல் காற்றுப் பறக்கடிப்பதுபோல உங்களைப் பறக்கடிப்பேன்; கவனம்.
இடைவிடா ஜெபம் உன்னிலிருந்து எழும்பிக்கொண்டேயிருக்கட்டும். உன் ஜெப பலிபீடம் விறகில்லாமல் அணைந்துபோகவிடாதே! அது ஜெபமாநாடுகளுக்குப் போவதால் நடப்பதில்லை; மாறாக, உன் உறவின் வலிமை என்னோடு இருப்பதனையேச் சார்ந்தது.
சிலுவையை மேன்மை பாராட்டும் மக்களை நீ உருவாக்கிவருகிறாய். தனக்கு இலாபமாயிருப்பவைகளை, கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவின் சபைக்காகவும் குப்பை என்று எண்ணுகிறவர்களையும், இரத்தம் சிந்தியாகிலும் இந்தியா இயேசுவைக் காணவேண்டும் என்ற வாலிப ஆண் மற்றும் பெண் அனைவரையும் நீ முறையாகப் பயிற்றுவிக்கிறாய். ஏழைகளுக்குப் படிப்புச் சொல்லித்தந்து, பணித்தளத்திற்குச் செல்ல அவர்களை உந்துவிக்கிறாய். சிறுவர்களுக்குப் பால வயதிலேயே மிஷனரிகளின் வாழ்க்கையைச் சொல்லித் தந்து, இயேசுவுக்காய் நீ என்ன செய்கிறாய்? என்று அவர்களைப் பார்த்து கேட்கிறாய்.
கொஞ்ச பெலன் இருந்தும் புறப்படப்பண்ணும் சபை உண்டு